Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் ஒரே நாளில் 9,304 பேருக்கு கொரோனா தொற்று

ஜுன் 04, 2020 07:40

புதுடெல்லி: இந்தியாவில், ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.16 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 6 ஆயித்தை கடந்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 4) காலை 09:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 16 ,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 6,075 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,107, ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 1,06,737 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 9,304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 260 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு

மஹாராஷ்டிரா - 74,860 2,587

தமிழகம் - 25,872 -208

டில்லி - 23,645-606

குஜராத் - 18,100-1,122

ராஜஸ்தான் - 9,652 - 209

உத்தர பிரதேசம் - 8,729 - 229

மத்திய பிரதேசம் - 8,588 - 371

மேற்கு வங்கம் - 6,508-345

மேற்கு வங்கம்- 6,508 - 345

பீஹார் - 4.390-25

ஆந்திரா - 4,080 - 68

கர்நாடகா- 4,063 - 53

தெலுங்கானா - 3,020 - 99

ஹரியானா - 2,954 - 23

காஷ்மீர் - 2,857 -34

ஒடிசா- 2.388-07

பஞ்சாப்- 2,376-47

அசாம் - 1,672-04

கேரளா - 1,494 - 11

உத்தரகாண்ட் - 1,085-08

ஜார்க்கண்ட்-752 -05

சத்தீஸ்கர்-668 -02

திரிபுரா-468-0

ஹிமாச்சல பிரதேசம் -359 - 05

சண்டிகர் -301-05

மணிப்பூர்-118-0

லடாக்-90-01

புதுச்சேரி- 82 - 0
கோவா-79-0


நாகலாந்து-58-0

அருணாச்சல பிரதேசம்-38-0

அந்தமான-33-0

மேகாலயா-33-1

மிசோரம்-14-0

தாதர் மற்றும்நாகர் ஹவேலி-8-0

சிக்கிம்-02-0

தலைப்புச்செய்திகள்